இலங்கை ஆட்டோமொபைல் விளையாட்டு சங்கத்தின் செயற்பாடுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்காக அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரெஷான் ரணசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (09) வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதனை முன்னெடுத்து செல்வதற்காக தற்காலிக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
7 பேர் கொண்ட குறித்த குழுவின் தலைவராக மஹேஸ் கம்மன்பில செயற்படவுள்ளார்.