அக்குறணையில் தோட்டாக்களுடன் கைதான மூவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அக்குறணையில் தோட்டாக்களுடன் கைதான மூவர்!


துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் அக்குறணை - அலவத்துகொடை பகுதியில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


அலவத்துகொடையின் அக்குறணை நகரப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அவதானித்த புலனாய்வு பொலிஸ் அதிகாரி ஒருவர் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவர் வீதியில் சென்ற நபரிடம் பொதி ஒன்றை வழங்குவதை அவதானித்துள்ளார்.


இதனால் சந்தேகமடைந்த புலனாய்வுத்துறை அதிகாரி குறித்த பொதியை சோதனை செய்ததில் இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


பின்னர், இது தொடர்பில் அலவத்துகொடை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.