பிரான்ஸ் அரச பாடசாலைகளில் அபாயா அணியத் தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரான்ஸ் அரச பாடசாலைகளில் அபாயா அணியத் தடை!

அரசு நடத்தும் பாடசாலைகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா (பர்தா) எனப்படும் ஆடையை அணிவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ், 19ம் நூற்றாண்டு சட்டங்கள் பொதுக் கல்வியில் இருந்து பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கியதில் இருந்து அரச பாடசாலைகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அமல்படுத்தியது.

மேலும், வளர்ந்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை புதுப்பிக்கவும் போராடியது. 2004ம் ஆண்டில், பாடசாலைகளில் முக்காடு அணிவதைத் தடைசெய்தது மற்றும் 2010ம் ஆண்டில் பொது இடங்களில் முழு முகத்தை மூடுவதற்குத் தடை விதித்தது.

இந்நிலையில், பாடசாலைகளில் இனி அபாயா அணிய முடியாது என்று முடிவு செய்துள்ளேன் என்று கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் கூறினார். 

"நீங்கள் வகுப்பறைக்குள் செல்லும்போது, மாணவர்களைப் பார்த்து அவர்களின் மதத்தை நீங்கள் அடையாளம் காண முடியாது," என்று அவர் கூறினார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.