![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPdRzRFv9y6sKO9ULyyDU-VmahA16L15g2PX-2lAK9XZi86UKcuqs7V6U4lbnQautBOJIR5J-SqjBDOccg2DdNAC86blQtgx0AAoC7inB94hgGGL-Dcu1pSDVw2xnqGtB-m5ZRWKrKNIndPpnxl4XGwQbTmjHgW6nrYsV7hyKC8-dJsyadGpFVnF6TMcFH/s16000/IMG_6437.jpeg)
குறித்த இளைஞன் ரூ. உகண்டா பெண் ஒருவருக்கு ரூ. 3.5 மில்லியன் செலுத்தி துபாய் வழியாக பிரான்சுக்கு பறக்கும் நோக்கத்துடன் அவரது போலி விசாவைப் பெற்றுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 24 வயதான மாத்தறையைச் சேர்ந்தவர்.
இளைஞன் கொழும்பில் உள்ள கசினோ ஒன்றில் பணிபுரிந்து வந்ததுடன், இரண்டு மாதங்களுக்கு முன்னர் உகண்டாவில் உள்ள கசினோ ஒன்றில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளார்.
அவர் தனது வேலையின் போது சந்தித்த உகண்டா பெண் ஒருவர் பிரான்சுக்கு செல்வதற்காக போலி ஆவணங்களை உருவாக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் தனது பெற்றோருக்கு சொந்தமான காணி மற்றும் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை விற்று போலி விசாவிற்கு தேவையான 3000 அமெரிக்க டொலர்களை சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.