போலி பிரான்ஸ் விசாவுடன் தப்பிக்க முயன்ற இலங்கையர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போலி பிரான்ஸ் விசாவுடன் தப்பிக்க முயன்ற இலங்கையர் கைது!

போலி வீசாவுடன் இலங்கை இளைஞர் ஒருவர் பிரான்சுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் ரூ. உகண்டா பெண் ஒருவருக்கு ரூ. 3.5 மில்லியன் செலுத்தி துபாய் வழியாக பிரான்சுக்கு பறக்கும் நோக்கத்துடன் அவரது போலி விசாவைப் பெற்றுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 24 வயதான மாத்தறையைச் சேர்ந்தவர்.

இளைஞன் கொழும்பில் உள்ள கசினோ ஒன்றில் பணிபுரிந்து வந்ததுடன், இரண்டு மாதங்களுக்கு முன்னர் உகண்டாவில் உள்ள கசினோ ஒன்றில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளார்.

அவர் தனது வேலையின் போது சந்தித்த உகண்டா பெண் ஒருவர் பிரான்சுக்கு செல்வதற்காக போலி ஆவணங்களை உருவாக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் தனது பெற்றோருக்கு சொந்தமான காணி மற்றும் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை விற்று போலி விசாவிற்கு தேவையான 3000 அமெரிக்க டொலர்களை சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.