சிறுவனின் மரணம் தொடர்பில் வெளியான பிரேத பரிசோதனையில் குளறுபடி! விசாரணைக்கு உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுவனின் மரணம் தொடர்பில் வெளியான பிரேத பரிசோதனையில் குளறுபடி! விசாரணைக்கு உத்தரவு!


பொரளை லேடிரிஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் சிறுநீரகங்கள் குறித்து மருத்துவ அறிக்கைகளுக்கும் பிரேத பரிசோதனை அறிக்கைகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடு குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொரளை பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


மருத்துவ பரிசோதனைகளில் சிறுவனிற்கு இரண்டு சிறுநீரகங்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும், எனினும் பிரேத பரிசோதனையில் ஒரு சிறுநீரகம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.


பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் வேண்டுகோளை தொடர்ந்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


மருத்துவ பரிசோதனை அறிக்கை இரண்டு சிறுநீரகங்கள் என தெரிவிக்கும் போது, பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒரு சிறுநீரகம் என ஏன் தெரிவிக்கப்பட்டுள்ளது என விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனை தொடர்ந்து இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.