அரச சேவைக்கு அடுத்த வருடம் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச சேவைக்கு அடுத்த வருடம் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது?


அரச சேவைக்கு அடுத்த வருடம் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.


எனவே, அடுத்த வருடத்துக்கான மதிப்பீடுகளை தயாரிப்பதில் அதற்கான ஒதுக்கீடு எதுவும் வழங்கப்பட மாட்டாது என செயலாளர் கூறியுள்ளார்.


அடுத்த வருடத்துக்கான சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் மதிப்பீடுகள் இவ்வருடம் ஜூன் 30 ஆம் திகதி வரையான நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.