நுவரெலியா துப்பாக்கிச் சூட்டில் இளம் தம்பதி பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நுவரெலியா துப்பாக்கிச் சூட்டில் இளம் தம்பதி பலி!


நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர்கள் அன்டன்தாஸ் வயது (32) நாதன் ரீட்டா வயது (32) எனவும் இருவரும் கணவன் மனைவி எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்களின் படி, கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவன் மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன் கணவனும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார்.


துப்பாக்கிச் சூடு நடத்திய கணவரின் தாயாருக்குச் சொந்தமான இவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே நேற்று (07) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


சம்பவ இடத்தை பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட நீதவான் வருகை தந்து மரண விசாரணைகள் இடம்பெற்ற பின் சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.