மாமியார் வீட்டில் துன்புறுத்தல்; கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்த இளம் பெண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாமியார் வீட்டில் துன்புறுத்தல்; கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்த இளம் பெண்!


இளம் தாய் ஒருவரது சடலம் இன்று (23) குளத்தில் மிதந்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத்தில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தாயான தயானி (26) சடலமாக மீட்கப்பட்டார். அவர் தனது ஒரு வயது மகளுடன் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தயானி, தன்னையும் குழந்தையையும் தனது கணவர் மற்றும் கணவரின் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்துவதாக மூன்று பக்க கடிதம் எழுதியதாகவும், அந்த கடிதத்துடன் அவரது திருமண சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை ஏரிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

லிந்துல லோகி தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் பெண் தனது குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் பரிசோதகர் சிசிர குமார தெரிவித்தார்.

பெண்ணின் சடலம் குளத்தில் மிதந்தது. குழந்தையின் சடலம் தேடப்பட்டு வருகின்றது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.