சாய்ந்தமருது - மாளிகைக்காடு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாய்ந்தமருது - மாளிகைக்காடு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!


சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களைக் கடத்தும் வெள்ளை வேன் கொண்ட குழு ஒன்று உலாவுவதால் பிரதேச மக்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறு சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப்பள்ளிவாசலினால் விடுக்கப்படுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப்பள்ளிவாசலின் செயலாளர் ஐ.எல்.எம் மன்சூரினால் விடுக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,


சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தின் மாளிகா வீதியில் (சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு அருகாமையில்) கடந்த திங்கட்கிழமை (07) பாடசாலை செல்லும் மாணவியொருவரை வெள்ளை வேன் கொண்ட ஒரு குழுவினால் கடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. 


மேலும், ஒவ்வொரு நாளும் மதிய நேரமான முற்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை பிற இனத்தவர்கள் பர்தா உடை அணிந்து யாசகம் கேட்டு வீடுகளுக்குள் உள் நுழைகின்றனர்.


இதன் மூலமாக கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசத்தில் அதிகம் காணப்படுகின்றன.


எனவே, பெற்றோர்களே! பொதுமக்களே! தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கோ அல்லது வெளி இடங்களுக்கோ அனுப்பும் போது கவனமாக இருந்து மிகவும் பாதுகாப்பாகச் செயற்படுமாறும் தங்களின் சுற்றுப்புறங்களை உன்னிப்பாக அவதானித்து, தங்கள் பிரதேசங்களை அண்மித்த இடங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதாவது வாகனங்களோ அல்லது மனிதர்களோ நடமாடுமாடினால் அதனை பள்ளிவாசலிலோ அல்லது பொலிஸாரிடமோ அறிவிக்குமாறும் பொதுமக்கள்அறிவுறுத்தப்படுகின்றனர். தங்கள் பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்துமாறும்கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


அத்துடன் பகல் வேளைகளில் தங்கள் வீடுகளுக்கு யாசகம் கேட்டு வரும் பிற இனத்தவர்களிடம் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.