சிறுவன் உயிரிழந்த சம்பவம்; சத்திரசிகிச்சை செய்த வைத்தியர் தொடர்பாக வெளியான மேலதிக தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுவன் உயிரிழந்த சம்பவம்; சத்திரசிகிச்சை செய்த வைத்தியர் தொடர்பாக வெளியான மேலதிக தகவல்!


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


சிறுவனின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து  சுகாதார அமைச்சும் வைத்தியசாலையும் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையிலேயே கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் இயக்குநர் வைத்தியர் ஜி விஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பல தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளதால் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.


குறிப்பிட்ட வைத்தியர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நாட்டிலிருந்து வெளியேறுவது குறித்து குறிப்பிட்ட வைத்தியர் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அறிவித்தாரா என வைத்தியசாலையின் இயக்குநரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு பதிலளித்துள்ள அவர் குறிப்பிட்ட உயிரிழப்பு இடம்பெறுவதற்கு முன்னரே வைத்தியர் விசாவிற்கு விண்ணப்பித்திருந்ததால் விசாரணைகள் முடிவடையும் வரை எந்த முடிவிற்கும் வரமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


குறிப்பிட்ட மருத்துவரை சுகாதார அமைச்சின் கீழ் பணிக்கு அமர்த்தவில்லை அவர் கொழும்பு பல்கலைகழக மருத்துவ பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரே அவர் எனவும் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.