தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம்! #இலங்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம்! #இலங்கை


சிலாபம் மேற்கு இரணைவில சமிந்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 09 வயதுடைய சிறுமியின் சடலம் நேற்று (11) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.


வீட்டுக்குள் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் காணப்பட்டதாக காவற்துறை தெரிவித்ததாக லங்காதீப தெரிவித்துள்ளது .


சந்தேக மரணம் எனக் கருதி சிலாபம் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


குழந்தையின் தாய் கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் தொழில் செய்து வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


சம்பவத்தின் போது குழந்தையின் தந்தை குடியிருப்பில் உள்ள தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


குழந்தையின் சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.