மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற செவிலியர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற செவிலியர்!


இங்கிலாந்து மருத்துவமனை ஒன்றில் ஏழு பச்சிளம் குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள செவிலியர் ஒருவர் நேற்று (18) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.


இங்கிலாந்திலுள்ள Cheshire என்ற இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில், பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்படும் வார்டில் பணியாற்றிவந்த 32 வயதான லூசி (Lucy Letby) என்ற பெண் செவிலியர் மீதுதான் ஐந்து ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மேலும் ஐந்து ஆண் குழந்தைகளையும், ஐந்து பெண் குழந்தைகளையும் கொலை செய்ய முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


அதேவேளை லூசி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், அவர் மான்செஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். எதிர்வரும் அக்டோபர் மாதம் 04ஆம் திகதி லூசி மீதான வழக்கு விசாரணை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.