எதிர்வரும் 2048 இல் மின்சார பேருந்துகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் 2048 இல் மின்சார பேருந்துகள்!


எதிர்வரும் 2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.


இது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்துப் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கித் தேசிய போக்குவரத்துக் கொள்கை மற்றும் இலத்திரனியல் பயணச்சீட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


பயணிகள் பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் இலத்திரனியல் பயணச்சீட்டு முறை முன்மொழியப்பட்டுள்ளதாகவும் இதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


அதேநேரம் 7 தேசிய பேருந்து சங்கங்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அது தொடர்பில் மாகாண மட்டத்தில் விரைவில் கருத்துக்கள் பெறப்படும் என இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.


9 மாகாணங்கள் தொடர்பில் 09 பிரதிநிதிகளை நியமித்துத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.