12 வயது பிக்கு கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

12 வயது பிக்கு கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!


மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவெனாவில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த சடலம் நேற்றைய தினம் (21) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


12 வயதுடைய பிக்கு மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


பிரிவெனாவில் குறித்த பிக்கு இல்லாததால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவர் கிணற்றுக்குள் விழுந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.