ரஷ்ய தம்பதியை காப்பாற்ற முயன்ற இலங்கையர் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரஷ்ய தம்பதியை காப்பாற்ற முயன்ற இலங்கையர் உயிரிழப்பு!


களுத்துறை, வஸ்கடுவ கடலில் நேற்று (23) பிற்பகல் நீராடிக்கொண்டிருந்த போது அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய தம்பதியரை மீட்க முற்பட்ட இலங்கையின் உயிர்காக்கும் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கடலில்  நீராடிக்கொண்டிருந்த போது அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய தம்பதி உட்பட நான்கு பேரை இளைஞர்கள் குழு ஒன்று காப்பாற்றியுள்ளது.


சம்பவத்தில் உயிரிழந்த உயிர்காப்பு வீரர் களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் உயிர்காக்கும் காவலராக பணியாற்றி வந்தார். 


நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, ரஷ்ய பெண் உதவிக்கு அழைத்ததைக் கேட்ட உயிர்காப்பாளர் கடலில் குதித்துள்ளார். எனினும், நீராடும்போது திடீரென ஏற்பட்ட அலையில் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.


அதன்பிறகு, நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றுவதற்காக ஹோட்டலின் இரண்டு ஊழியர்களும் கடலுக்குள் இறங்கினர், ஆனால் அவர்களும் அடித்துச் செல்லப்பட்டனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.