சூரியவெவ – வெலிகம பகுதியில் நீர்ப்பம்பியை திருட சென்றதாக கூறப்படும் ஒருவர் பிரதேச மக்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சூரியவெவ பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
திருடுவதற்கு சென்ற நபரொருவர் பிடிக்கப்பட்டதாக அந்த பகுதி மக்கள் வழங்கிய தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர்.
எனினும், காவல்துறையினர் அங்கு செல்லும் போது சந்தேகநபர் தாக்குதலுக்கு இலக்காகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் 23 மற்றும் 33 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.