திருடச் சென்ற இளைஞனை ஊர் மக்கள் சூழ்ந்து தாக்கியதில் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருடச் சென்ற இளைஞனை ஊர் மக்கள் சூழ்ந்து தாக்கியதில் பலி!


சூரியவெவ – வெலிகம பகுதியில் நீர்ப்பம்பியை திருட சென்றதாக கூறப்படும் ஒருவர் பிரதேச மக்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.


சூரியவெவ பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


திருடுவதற்கு சென்ற நபரொருவர் பிடிக்கப்பட்டதாக அந்த பகுதி மக்கள் வழங்கிய தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர்.


எனினும், காவல்துறையினர் அங்கு செல்லும் போது சந்தேகநபர் தாக்குதலுக்கு இலக்காகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.


சம்பவம் தொடர்பில் 23 மற்றும் 33 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.