பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கு சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கு சுகாதார அமைச்சின் அறிவிப்பு!


பதிவு செய்யப்படாத அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன் சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒழுங்குமுறை சபை அறிவித்துள்ளது.


2006 ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க தனியார் மருத்துவ நிறுவனங்களின் பதிவுச் சட்டத்தின் விதிகளின்படி, இலங்கையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களும் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் பதிவு செய்யப்பட வேண்டும்.


இது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்து உரிய பதிவை மேற்கொள்ளலாம்.


இவ்வாறு பதிவு செய்யாத அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கு எதிராகவும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஒழுங்குமுறை சபை தெரிவித்துள்ளது.


கடந்த நான்கு மாதங்களில் பதிவு செய்யப்படாத சுமார் 1,500 தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.