கற்பித்து கொடுத்தது புரியவில்லை என மாணவியை கடுமையாக தாக்கிய அதிபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கற்பித்து கொடுத்தது புரியவில்லை என மாணவியை கடுமையாக தாக்கிய அதிபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!


யாழ். தீவக கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 09 வயதான மாணவியை பிளாஸ்ரிக் குழாயினால் 20 தடவைகள் தாக்கியதாக பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. 


அதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) பாடசாலை அதிபர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். 


நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் போது, பாடசாலையில் மேலதிக வகுப்பு நடாத்தியதாகவும், அதன் போது ஒரு விடயத்தை மூன்று தடவை விளங்கப்படுத்தியும் மாணவியால் விளங்கிக்கொள்ள முடியாது, தவறிழைத்தமையால் நிதானம் இழந்து மாணவியை தாக்கினேன் என மன்றில் கூறினார். 


அதனை அடுத்து, நிதானம் இழப்பதும் ஒரு வகை நோயே, அதற்கு உளவியல் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்திய நீதவான், 05 இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அதிபரை அனுமதித்து, வழக்கினை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 


அதேவேளை, மாணவியை தாக்கிய அன்றைய தினம் குறித்த மாணவி உள்ளிட்ட 09 மாணவிகளை அதிபர் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.