அரச பத்திரிகைக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடை உத்தரவு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச பத்திரிகைக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடை உத்தரவு!!


சிலுமின செய்தித்தாள், www.silumina.lk மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சமூக ஊடக கணக்குகளுக்கும் இலங்கை கிரிக்கெட் (SLC) மற்றும் அதன் அதிகாரிகள் தொடர்பான எந்தவொரு உள்ளடக்கத்தையும் வெளியிடுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சிலுமின பத்திரிகை மற்றும் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஆஃப் சிலோன் லிமிடெட் (ANCL) ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக SLC இன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த பின்னரே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு தொகையாக ஒரு பில்லியன் ரூபா வழங்க வேண்டும் என புகார் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, SLC அல்லது அதன் நிர்வாகிகளை இழிவுபடுத்தும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் வெளியிடுவதற்கு மேலே குறிப்பிடப்பட்ட ஊடக நிறுவனத்திற்கு நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. புகார் மீதான விசாரணை முடியும் வரை இந்த கட்டுப்பாடு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.