புலமைப்பரிசில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலமைப்பரிசில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!


இன்று (06) நள்ளிரவுடன் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணைக்குழுவின் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஜூன் 15 ஆம் திகதி இணையவழி மூலம் மட்டுமே தொடங்கியது .


இன்று நள்ளிரவுடன் முடிவடையும் காலக்கெடு எந்த சந்தர்ப்பத்திலும் நீடிக்கப்படமாட்டது என பரீட்சைகள் ஆணைக்குழு தலைவர் முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.


2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் ஜூன் 15 ஆம் திகதி அறிவித்திருந்தது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.