ஐந்து இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடையை நீக்க அரசு முடிவு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐந்து இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடையை நீக்க அரசு முடிவு!!

 


இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடை செய்யப்பட்டிருந்த ஐந்து இஸ்லாமிய அமைப்புகளின் மீதான தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த விசாரணைக்கு பின்னர், புலனாய்வு அமைப்புகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளிற்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே, இலங்கை அரசாங்கத்தில் தடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து

1- ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் முஹம்மதியா (JASM),

2- ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ),

3- அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் (ACTJ),

4- சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ),

5- ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (UTJ)

எனும் ஐந்து அமைப்புகளின் மீதான தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் குறித்த இந்த குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையேயான கலந்துரையாடலின் பின்னரே இந்த ஐந்து அமைப்புகளின் மீதான தடை நீக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.