உயர்கல்வி கற்க வட்டியில்லாக் கடன்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்கல்வி கற்க வட்டியில்லாக் கடன்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!


தனியார் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்பதற்கான வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அதன்படி, 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக இந்தக் கடன் திட்டத்தின் கீழ் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இதன்போது, தொழிற்கல்வி பாடநெறிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.