பேராதனை வைத்தியசாலை பெண்ணின் மரணத்திற்கு காரணம் தடுப்பூசி அல்ல!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேராதனை வைத்தியசாலை பெண்ணின் மரணத்திற்கு காரணம் தடுப்பூசி அல்ல!


சமோதி சந்தீப்பணியின் மரணத்திற்கு அவருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி காரணமில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.


பேராதனை போதனா வைத்தியசாலையில் மரணித்த சமோதி சந்தீப்பனியின் மரணம் தொடர்பில்  விசாரணை நடத்த விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


இந்த குழு இன்று (15) பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.


எவ்வாறாயினும், போதனா வைத்தியசாலையில் மரணித்த குறித்த யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி மரணத்தை ஏற்படுத்தவில்லையென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த மரணம் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணையின் ஊடாக அதனை உறுதிப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.