காப்புறுதி தொகை பெற்றுக்கொள்ள ஓடும் சொகுசு பஸ் வண்டியை திட்டமிட்டு எரித்து சாம்பலாக்கிய உரிமையாளர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காப்புறுதி தொகை பெற்றுக்கொள்ள ஓடும் சொகுசு பஸ் வண்டியை திட்டமிட்டு எரித்து சாம்பலாக்கிய உரிமையாளர்!


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று கடந்த ஜூன் 30ஆம் திகதி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமான நிகழ்வு, பேருந்திற்கான முப்பது மில்லியன் ரூபா காப்புறுதித் தொகையை பெற்றுக்கொள்ள அதன் உரிமையாளர் மேற்கொண்ட திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.


எனினும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை.


இருப்பினும் குறித்த பேருந்து முற்று முழுதாக எரிந்து விட்டது.


பொலிஸார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பேருந்துக்கான 30 மில்லியன் ரூபாய் காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பேருந்தின் உரிமையாளரே அதை எரித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.