பல வருடங்களுக்கு முன் ஜீன்ஸ் திருடியவர்க்கு கடூழிய சிறைத்தண்டனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல வருடங்களுக்கு முன் ஜீன்ஸ் திருடியவர்க்கு கடூழிய சிறைத்தண்டனை!


கொழும்பு கறுவாத் தோட்டப்பகுதியிலுள்ள ஆடையகம் ஒன்றிலிருந்து 2017 ஆம் ஆண்டு, ரூ 40,000 பெறுமதியுள்ள காற்சட்டைகளை திருடிய இளைஞன் ஒருவருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆறு வருடங்களாக சாட்சிகளின்றி விவாதிக்கப்பட்டு வந்த இந்த வழக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (10) முடிவுக்குக் கொண்டுவந்தது. 


கொழும்பு 08 ஐச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறித்த ஆடையகத்திலிருந்து, ரூ.19,900 பெறுமதியுள்ள இரண்டு காற்சட்டைகளைத் திருடியுள்ளார்.


ஆரம்பத்தில், சிசிடிவி காணொளிகளைப் பரிசோதித்ததன் அடிப்படையில் குறித்த சந்தேக நபரைக் கறுவாத் தோட்டப் பொலிஸார் கைது செய்த போதும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


எவ்வாறாயினும், சுமார் 6 வருடங்களாக இந்த வழக்கை விவாதித்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்றைய தினம் சந்தேக நபருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.