காணாமல் போன 32 வயது டென்மார்க் பெண் சடலமாக மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காணாமல் போன 32 வயது டென்மார்க் பெண் சடலமாக மீட்பு!


கடுகண்ணாவ அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது காணாமல்போன 32 வயதுடைய டென்மார்க்கை சேர்ந்த பெண்ணின் சடலம் பொலிஸாரால் இன்று (14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் நேற்று முதல் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையையின் போதே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


குறித்த பெண் மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது தவறி வீழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


கடந்த மாதம் 26 ஆம் திகதி இலங்கை வந்து குறித்த பெண், தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஜூலை 10 ஆம் திகதி கண்டியில் உள்ள விடுதி ஒன்றுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.


தான் சுற்றுலா செல்வதாக விடுதி நிர்வாகத்திடம் கூறியதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வரை விடுதிக்கு திரும்பாத நிலையில், நிர்வாகம் கண்டி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.


அதன்பிறகு அவரது அறையை உடைத்த பொலிஸார் அவரது உடைமைகள் சிலவற்றைக் கண்டுபிடித்தனர்.


அவர் திரும்பி வருவாரா என்பதைப் பார்க்க ஒரு நாள் காத்திருக்க வேண்டும் என்று விடுதி நிர்வாகத்திடம் பொலிஸார் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


இருப்பினும், குறித்த பெண் விடுதி திரும்பாததால் அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும்  விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று முதல் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.