மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை!

மேலும் 300 அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (12) தெரிவித்துள்ளார்.

எனினும், இறக்குமதி தளர்வுகள் குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் எப்போது நீக்கப்படும் என்பது குறித்து அவர் தகவல் வெளியிடவில்லை.

எதிர்காலத்தில் கூடுதல் இறக்குமதி தளர்வுகள் எதிர்பார்க்கப்படுவதாக அண்மையில் மத்திய வங்கி அறிவித்திருந்த நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும், தற்போதுள்ள பொருளாதார நிலைமைகளின் கீழ் வாகன இறக்குமதியை அனுமதிக்க முடியாது என்றும், நாட்டின் நிலைமையை கவனமாக ஆராய்ந்த பிறகே வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.