14 வயது சிறுமியுடன் திருமண உறவில் இருந்த இளைஞன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

14 வயது சிறுமியுடன் திருமண உறவில் இருந்த இளைஞன் கைது!


கண்டி - கட்டுகஸ்தோட்டையில் 14 வயதான சிறுமியை 29 வயது இளைஞன் காதலித்து திருமண உறவில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் 29 வயதான அவ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த திருமண வாழ்க்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள கலவன் பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் பயிலும் அச்சிறுமியுடன் மேற்படி இளைஞன் ஒருவருடமாக காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அச்சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற இளைஞன் சிறுமியுடன் திருமண வாழ்க்கை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய ​இளைஞனும் சிறுமியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


இளைஞனையும் தாயாரையும் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சிறுமியை தங்களுடைய பொறுப்பின் கீழ், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கொண்டுவந்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.