13வது திருத்தம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே நோக்கம் – ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

13வது திருத்தம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே நோக்கம் – ஜனாதிபதி

அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் திராவிட கட்சி எம்.பி.க்களுடன் மாத்திரம் கலந்துரையாடினால் போதாது, நாடு முழுவதையும் பாதிக்கும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி முடிவெடுப்பதே தமது நிலைப்பாடு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் தனக்கு மாத்திரமன்றி முன்னைய ஏழு நிறைவேற்று ஜனாதிபதிகளுக்கும் இல்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருப்பதாகவும், நாட்டுக்கு பொருத்தமான பிரேரணைகளை மாத்திரமே கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.