மேன்முறையீட்டு நீதிபதியின் வீட்டில் 13 லட்சம் பெறுமதியான பணம் மற்றும் நகை திருட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேன்முறையீட்டு நீதிபதியின் வீட்டில் 13 லட்சம் பெறுமதியான பணம் மற்றும் நகை திருட்டு!


ஊராபொல போபத்த பிரதேசத்தில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் 7 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 6 இலட்சம் ரூபா பெறுமதியான  பொருட்கள், பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தனகல்ல பொலிஸார் கூறினர்.


முதற்கட்ட விசாரணையில் நீதிபதி வீட்டில் இல்லை என்றும் வேலையாட்கள் மட்டுமே இருந்ததும் தெரிய வந்துள்ளது.


பொலிஸார் நடத்திய விசாரணையில், வீட்டின் அலுமாரிக்குள் சிறிய பெட்டகத்திலிருந்து தங்க நகைகள், பொருட்கள் மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்தது.


கம்பஹா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையில் அத்தனகல்ல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் யசேந்திர நாலக தலைமையில் இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.