வெளிநாட்டில் இருந்து வந்த இருவருக்கு HIV தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டில் இருந்து வந்த இருவருக்கு HIV தொற்று!


வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் வவுனியாவில் HIV தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.


வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே இரண்டு ஆண்களும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 


வவுனியா மாவட்டத்தில் HIV சிகிச்சைப் பிரிவு 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கடந்த 2022 டிசம்பர் வரை 30 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் தீவிர தொற்றுடன் சிகிச்சைக்கு வந்தவர்கள் மற்றும் சீராக சிகிச்சை பெறாதவர்கள் என்ற அடிப்படையில் 07 ஆண்களும் 05 பெண்களுமாக மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தற்போது HIV தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.