மஹிந்த நாட்டுக்கு தேவையானதை விட அதிகமாகவே செய்துள்ளார்; மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹிந்த நாட்டுக்கு தேவையானதை விட அதிகமாகவே செய்துள்ளார்; மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடமாட்டார் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.


நேற்று (22) செய்தியாளர்களிடம் பேசிய இராஜாங்க அமைச்சர், மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு தேவையானதை விட அதிகமாக செய்துள்ளார்.


மஹிந்த ராஜபக்ச இலங்கைக்காக பலவற்றை செய்த தலைவர் என நான் நினைக்கிறேன் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். 


முன்னாள் ஜனாதிபதி ஓய்வு பெற்று தனது ஓய்வு நேரத்தை அனுபவிக்க வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளதாக தாம் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்க்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயங்கப்போவதில்லை எனவும், அது நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் அமையும் எனவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்திகளையும் அவர் மறுத்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.