பொலிஸ் ஜீப் மீது கல்லெறிந்த குற்றச்சாட்டில் மூவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் ஜீப் மீது கல்லெறிந்த குற்றச்சாட்டில் மூவர் கைது!


கடந்த மே மாதம் 25 ஆம் திகதி தயகம பிரதேசத்தில் பொலிஸ் ஜீப் மீது கற்களால் தாக்குதல் நடத்திய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தயகம பொலிஸ் நிலையத்தின் குழுவொன்று தயகம, நெகேனஹிரவத்தை 3 பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர்களை அவர்கள் கைது செய்ததோடு, 34 லீற்றர் சட்டவிரோத மதுபானத்தையும் கைப்பற்றினர். 


எவ்வாறாயினும், சந்தேகநபர்களை விடுவிக்கும் நோக்கில் சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற ஜீப் வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் தயகம காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், வியாழக்கிழமை (08) இரவு சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் 22 மற்றும் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் தயகம, நெகேனஹிரவத்தை 3வது பிரிவு பிரதேசத்தில் வசிப்பவர்கள்.


இவர்கள் நேற்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜூன் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.