கண்டி வெடிப்பு சம்பவத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி வெடிப்பு சம்பவத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் பலி!


கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


வயல் நிலமொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வெடிப்பிற்காக பயன்படுத்தப்படும் உபகரணமொன்றை பயன்படுத்தி, குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.


சம்பவத்தில் மெனிக்ஹின்ன – கல்கடுவ பகுதியைச் சேர்ந்த 36 வயதான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.