மனைவி பிரசவிக்கும் போது கணவருக்கும் விடுமுறை? புதிய சட்டத் திருத்தங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மனைவி பிரசவிக்கும் போது கணவருக்கும் விடுமுறை? புதிய சட்டத் திருத்தங்கள்!


தொழிலாளர்களின் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள சட்டமூலம் அடுத்த மாதத்தில் தொழிலாளர் ஆலோசனை சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.


தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.


குறித்த சட்டங்கள் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் ஏழாவது நிகழ்வு நேற்றைய தினம் (14) அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


அத்துடன் இதுவரை பொது மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலான சாராம்சங்களும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


இதற்மைய, புதிதாக ஒருவரை சேவையில் இணைத்துக்கொள்ளும் போது மற்றும் பணிபுரியும் இடத்தில் காணப்படும் பாகுபாடுகளை தீரத்துக்கொள்வதற்கு சட்டத்தில் புதிய பரிந்துரைகளை அறிமுகப்படுத்தவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


அத்துடன், வேதன நிர்ணயச் சபைச் சட்டம் மற்றும் கடைகள் காரியாலயச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்படுகின்ற சேவை நிலைமை மற்றும் நிபந்தனைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்களில் காணப்படும் முரண்பாடுகளை தீர்த்து சமமான சட்ட அந்தஸ்த்தை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


மேலும் தொழிலாளர் விரும்பும் வேலை நாட்கள் மற்றும் நேரத்தை மாற்றிக்கொடுப்பதற்கும் புதிய தொழிலாளர் சட்டத்திருத்தத்தில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


மேலதிக பணிநேரம் மற்றும் அதற்கான கொடுப்பனவு தொடர்பில் ஒருமித்த தீர்மானத்தை கடைப்பிடிப்பதற்கு சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.


மேலும், வெளிநாட்டவர்கள் இலங்கையில் பணிபுரியும் போதும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதோடு, பயிற்சிபெறுவோர், பயிலுநர்களாக பணிபுரிவோர் மற்றும் கற்றல் நடவடிக்கைகளுடன் பணிபுரிவோர் தொடர்பிலும் சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.


அத்துடன், மனைவிக்கு பிரசவத்தின் போது கணவருக்கு விடுமுறை வழங்குவது தொடர்பிலும் புதிய சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.