புற்றுநோயினால் அவதிப்படும் மனைவியை உடலுறவு சித்திரவதை! #இலங்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புற்றுநோயினால் அவதிப்படும் மனைவியை உடலுறவு சித்திரவதை! #இலங்கை


மனைவியை உடலுறவுக்காக சித்திரவதை செய்தார் எனக் கூறப்படும்  67 வயதுடைய கணவன் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவரது மனைவி புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்.


அண்மையில் வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற 54 வயதுடைய பெண் ஒருவர் தனது 67 வயது கணவருக்கு எதிராக இது தொடர்பில்  முறைப்பாடு செய்துள்ளார்.


தனக்கு 14 வயதாக இருக்கும்போது விருப்பமில்லாமல் தனது கணவரை திருமணம் செய்ததாகவும்  திருமணமாகி 40 வருடங்களாவதாகவும் அவர் கூறியுள்ளர். 


தனக்கும் தனது கணவருக்கும் மூன்று மகன்கள் இருப்பதாகவும், மூத்த மகனுக்கு இப்போது 40 வயது என்றும் அவர்  தெரிவித்துள்ளார். தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை தனது கணவர் உடலுறவுக்காக சித்திரவதை செய்வதாக குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.  


இந்தச் சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சர்மிந்த டி சில்வாவின் அறிவுறுத்தலின்படி பொலிஸ் பரிசோதகர் நிஷான் குமார மற்றும் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஜயரத்ன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.