இறந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் உயிர் வந்த சம்பவம் ஒன்று பதிவு! #இலங்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இறந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் உயிர் வந்த சம்பவம் ஒன்று பதிவு! #இலங்கை


ஒரு பெண் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.


குறித்த பெண் 76 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, அவரது மகன் அவரது இறுதிச் சடங்குகளை தயார் செய்து, அவர் அடக்கம் செய்வதற்கு முன்பு தனது ஆடைகளை மாற்றத் தயாராகிக்கொண்டிருந்தபோது, ​​​​குறித்த பெண்ணுக்கு ஆழ்ந்த மூச்சுவிடும் சத்தம் கேட்டது.


அதன்படி உறவினர்கள் நடத்திய சோதனையில் குறித்த பெண் உயிரிழக்கவில்லை என தெரியவந்துள்ளதாக எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார்.


தற்போது அந்த பெண் ஏற்கனவே சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.