இலங்கை மின்சார சபையின் இ-பில் முறைமை அறிமுகம்! செயற்படுத்திக் கொள்வது எவ்வாறு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மின்சார சபையின் இ-பில் முறைமை அறிமுகம்! செயற்படுத்திக் கொள்வது எவ்வாறு?


இலங்கை மின்சார சபை நாட்டின் மூன்று பகுதிகளில் தனது இ-பில் முறையை ஜூலை மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது.


ட்விட்டரில் காணொளிச் செய்தியைப் பகிர்ந்துள்ள CEB, தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதிகளுக்கு எதிர்வரும் ஜூலை 01, 2023 முதல் இ-பில்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது. 


அதன்படி, தமது கட்டண விபரத்தை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாகப் பெறுவதற்கு பதிவு செய்யுமாறு பிரதேசவாசிகளை மின்சார சபை கேட்டுக் கொண்டுள்ளது. 


மின்கட்டணத்தை SMS மூலம் பெற விரும்புவோர் REG <space> தமது கணக்கு இலக்கத்தை டைப் செய்து 1987 என்ற எண்ணுக்கு SMS அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். (ie. REG<space>12345678 and send it to 1987)


மின்னஞ்சல் மூலம் பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ebill.ceb.lk இல் உள்நுழைந்து பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.