உலக மரபுரிமையாக மகாவம்சம் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலக மரபுரிமையாக மகாவம்சம் அறிவிப்பு!


இலங்கையின் மகாவம்சத்தை உலக மரபுரிமையாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.


மகாவம்சம் என்பது இலங்கையின் முக்கிய வரலாற்று சம்பவங்களை உள்ளடக்கிய ஒரு பொக்கிஷமாகும்.


வம்ச கதைகள், இலங்கை நாகரீகத்தின் ஒரு சிறப்பம்சமாகும். தூபவம்சம், போதிவம்சம், தாது வம்சம் போன்ற பல்வேறு பௌத்த புனித சின்னங்களைத் தழுவி வம்ச கதைகள் எழுதப்பட்டுள்ளதோடு அந்த பௌத்த போதனைகளுக்கு அமைவாக தமது வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட மக்களின் 3,000 ஆண்டுகளுக்கு மேல் நீண்டு செல்லும் நாகரீகத்தின் வளர்ச்சியை எழுதியுள்ள படைப்பு மகாவம்சமாகும். 


உலகத்தில் வேறு எந்தவொரு நாட்டிலும் காண முடியாத அதிசிறந்த படைப்பான மகாவம்சம் இலங்கையின் துறவற - இல்லற பேரறிஞர்களின் சிரேஷ்ட முயற்சியின் பெறுபேறாகும்.


அதன்படி, 2023 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்ட உலக நினைவகத்தின் சர்வதேச பதிவேட்டில் 64 புதிய, எழுதப்பட்ட பாரம்பரியங்களில் மகாவம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.