திருடிய லொறியை துண்டு துண்டாக பிரித்த மூவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருடிய லொறியை துண்டு துண்டாக பிரித்த மூவர் கைது!


களுத்துறை பயாகல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான லொறியை திருடி வாகனத்தை பிரித்ததில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்களை களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


அண்மையில் நான்கு பேர் லொறியின் உரிமையாளரைத் தாக்கி பணத்தையும் லொறியையும் திருடிச் சென்றதாக பயாகல பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.


இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் களுத்துறை வெட்டுமகட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை அடுத்து, பாதுக்க பிரதேசத்தில் வெற்று நிலத்தில் வாகனம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.