பாணந்துறை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட பாடசாலை மாணவன் கைக்குண்டுடன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாணந்துறை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட பாடசாலை மாணவன் கைக்குண்டுடன் கைது!

அண்மையில் பாணந்துறையில் ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக 23 வயதுடைய இளைஞன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தாக்குதலை நடத்துவதற்கு உதவி வழங்குவதற்காக பாடசாலை மாணவர் பிரதான சந்தேக நபருடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


பிரதான சந்தேக நபர் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி இரவு ஆடை தொழிற்சாலைக்கு முன்பாக பாதிக்கப்பட்டவரை வாளால் தாக்கியுள்ளார்.


பாதிக்கப்பட்ட நபர் தொழிற்சாலை வளாகத்திற்குள் ஓடினார், அதன் பிறகு சந்தேக நபர் பின்தொடர்ந்து அவரைத் தாக்கினார், இதன் விளைவாக அவர் இறந்தார். 


இந்த சம்பவம் தொழிற்சாலை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


உயிரிழந்தவர் மோதரவில பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.