ஒவ்வொரு முஸ்லிமும் உயிரிழக்கும் போது அது எனக்கு நித்திரையற்ற இரவாக இருந்தது! -அலி சப்ரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒவ்வொரு முஸ்லிமும் உயிரிழக்கும் போது அது எனக்கு நித்திரையற்ற இரவாக இருந்தது! -அலி சப்ரி


இலங்கையில் கொவிட் தொற்று உச்ச கட்டத்திலிருந்த வேளையில் ஒவ்வொரு முஸ்லிம் நபர் உயிரிழக்கும் போதும் அது தனக்கு நித்திரையற்ற இரவாகவே இருந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது மேற்கு ஆசிய நாடுகளுடனான இலங்கையின் உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் கூறினார். அப்போது சேவையாற்றிய ஒரு முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில், தனது வாழ்க்கையில் மிக மோசமான நிலையை உணர்ந்ததாக அவர் கூறினார்.


உலக சுகாதார ஸ்தாபனங்கள் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி அடக்கம் செய்யலாம் என  அமைச்சரவையும் தெரிவித்த போதும், நிபுணர்கள் குழு என்று அழைக்கப்படுபவர்கள் சிலர் அந்த முடிவை நடைமுறைப்படுத்த  அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.