வீட்டில் தனியாக இருந்த யுவதியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீட்டில் தனியாக இருந்த யுவதியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!


வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பாலியல்  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


20 வயதான குறித்த யுவதி, சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் இன் உறவினர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


குறித்த யுவதி தனியாக உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர் அவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும் அவர் 2021 ஆம் ஆண்டு முதல் நிகவெரட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்ததாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


பாதிக்கப்பட்ட பெண் அளித்த  முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ரஸ்நாயக்கபுர பொலிஸார் சந்தேகத்தின் பேரில் குறித்த பொலிஸ் சார்ஜன்டை கைது செய்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.