அக்குறணை பகுதியில் ஆயுத களஞ்சியசாலை; இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அக்குறணை பகுதியில் ஆயுத களஞ்சியசாலை; இருவர் கைது!


அலவத்துகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அக்குறனை - துனுவில பிரதேசத்தில் வீடொன்றை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


ரி-56 ரவைகள் 11, அலைபேசிகள் 29, இராணுவ ஜெக்கெட், ​ஹெரோய்ன் 2,070 மில்லிகிராம், தடை செய்யப்பட்ட கத்திகள் 7 மற்றும் 17,040 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் சனிக்கிழமை (24) இரவு 11.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டன. 


கைது செய்யப்பட்ட நபருடன் இருந்த பிரதான சந்தேகநபர், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் என்றும் தீகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.


பிரதான சந்தேகநபரான 43 வயதான நபர், ஈசி கேஷ் முறைமையின் ஊடாக போதைப்பொருள் விநியோகிக்கும் நபர் என்றும் அறியமுடிகின்றது. அவரிடமிருந்த கைக்குண்டு கொழும்பு பிரதேசத்தில் உள்ள நபரொருவரிடம் இருந்து விலைக்கு கொள்வனவுச் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.


ஆகையால் அவரை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்று, மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.