தங்க நாணயம் என கூறி இரும்பு துண்டுகளை வழங்கி செல்வந்தர்களை ஏமாற்றி வரும் கும்பல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தங்க நாணயம் என கூறி இரும்பு துண்டுகளை வழங்கி செல்வந்தர்களை ஏமாற்றி வரும் கும்பல்!


அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் தங்க நாணயங்கள் மற்றும் பொக்கிஷங்களில் இருந்து பெறப்படும் நகைகளை என கூறி இரும்பு துண்டுகளை வழங்கி செல்வந்தர்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.


இந்த மோசடி மூலம் நாடு முழுவதும் உள்ள கோடீஸ்வரர்களிடம் பல கோடி ரூபா பணம் சம்பாதித்து வரும் பல குழுக்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்த மோசடியாளர்களுக்கு அப்பகுதியில் உள்ள பல உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்துள்ளதால், அவர்கள் இந்த மோசடிகளை பகிரங்கமாக நடத்துவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் கோடீஸ்வரர்களை ஏமாற்றும் கும்பல் | A Mob That Cheats Millionaires


அப்பகுதியில் உள்ள பல மூத்த பொலிஸ் அதிகாரிகள் இந்த மோசடியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும் அவர்களின் சொகுசு வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த மோசடியாளர்கள் மீது பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வந்தாலும், இந்த உயர் பொலிஸ் அதிகாரிகளின் செல்வாக்கு காரணமாக அவை முறையாக விசாரிக்கப்படுவதில்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.


பொக்கிஷங்களில் இருந்து பெறப்படும் தங்கக் காசுகளை தங்க ஆபரணங்களுக்கு தருவதாகக் கூறி அவர்களை அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அழைத்து வந்து பல கோடி ரூபா பெறுமதியான பணத்தை பெற்றுக் கொண்டு இரும்பு துண்டுகளை கொடுத்து ஏமாற்றும் செயற்பாடு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.


நாடு முழுவதிலும் உள்ள பணக்காரர்கள் இந்த கும்பலிடம் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


-தமிழ்வின்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.