இரட்டை குடியுரிமை; டயானா வழக்கின் நீதிமன்ற புதுப்பிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரட்டை குடியுரிமை; டயானா வழக்கின் நீதிமன்ற புதுப்பிப்பு!


இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த போதிலும், 2023 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.


சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது குடியுரிமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் உரிமையை சவால் செய்து அவருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த ரிட் மனுவை தாக்கல் செய்த சிவில் செயற்பாட்டாளர் ஓஷால ஹேரத், பிரித்தானிய குடியுரிமை காரணமாக டயானா கமகே இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரினார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.