நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தில் தெஹிம்பிவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத, நிவித்திகல, கலவான, எஹெலியகொட மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகம், இரத்தினபுரி மாவட்டம் கிரியெல்ல, அயகம, குருவிட்ட மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.