![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwXv3wCHAZFzI8I1-Kku4jnM7qBVXXbkWa8GfTffNYr52FVNQ0ufWPraF5CbHbRUYe9GV_LudzZ9I55MfZ0TPkhcVH0yvKmky6VoAnoZrK-u8hAtkUQHOvhUx_otzKP2CfIcv_Fwb-2fIPPHf24oh92Ye7kwjzrp-AqU1vAmryQ757EgZTR01gclCi5A/s16000/IMG_4942.jpeg)
இதன்படி, கேகாலை மாவட்டத்தில் தெஹிம்பிவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத, நிவித்திகல, கலவான, எஹெலியகொட மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகம், இரத்தினபுரி மாவட்டம் கிரியெல்ல, அயகம, குருவிட்ட மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.