ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!


கடந்த 2021 டிசம்பர் 31ஆம் திகதி தமது சேவைக் காலத்தை நிறைவு செய்த மற்றும் இடமாற்றத்துக்கான கடிதம் கிடைத்த அனைத்து ஆசிரியர்களும் எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி ஆகும் போது, தமது பணி இடத்துக்கு அறிக்கையிட வேண்டும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


எவரேனும் ஒரு ஆசிரியர் மேன்முறையீட்டை முன்வைக்க வேண்டுமாயின், சேவைக்கு அறிக்கையிட்டப் பின்னர் குறித்த பாடசாலை அதிபர் ஊடாக ஆசிரியர் இடமாற்றப் பிரிவுக்கு மேன்முறையீட்டை சமர்ப்பிக்கலாம் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் இதற்காக கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றப் பிரிவுக்கு சமூகமளிக்க அவசியமில்லை.


மேலும் மேன்முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்தான தீர்மானங்கள் விரைவில் அறியத்தரப்படும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.