நாட்டில் மீண்டும் சரியும் தங்கத்தின் விலை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மீண்டும் சரியும் தங்கத்தின் விலை?


கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (19) ஆபரண தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.


அண்மையில் டொலர் பெறுமதி அதிகரித்து வந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து வந்திருந்ததுடன், 22 கரட் தங்கத்தின் விலையானது 160,000 ரூபா என்ற நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. 


இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலையில் திடீரென வீழ்ச்சி பதிவாகியிருந்தது.


அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 155,400 ரூபாவாக பதிவாகியிருந்தது. 


24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 168,000 ரூபாவாக பதிவாகியிருந்தது. 


இதேவேளை கடந்த 16ஆம் திகதி 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 159,000 என்ற மட்டத்திலிருந்தது. 


இவ்வாறான சூழலில் இன்றைய தினம் (19) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாவாக காணப்படுகிறது. 


அதேநேரம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 


இந்நிலையில் ஏற்கனவே தங்க விலையானது 146,000 ரூபா வரையில் குறைந்த போது இன்னும் விலை குறைவை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு திடீர் விலை அதிகரிப்பானது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.


இவ்வாறான சூழலில் மீண்டும் தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகி வரும் நிலைமையானது தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு மீண்டுமொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக பொருளாதார அவதானிகள் தெரிவித்துள்ளனர். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.