வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!


கொழும்பு - குருணாகல் பிரதான வீதியின் துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று (12) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.


முச்சக்கர வண்டியொன்றும், டிப்பரொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (40), தாய் (39) மற்றும் மகன் (13) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.